சென்னை:
வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ்  தடுப்பு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு 6வது முறையாக பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பேணும் வகையில் அவர்களுக்கு இலவசமாக ரேசன் உணவுப்பொருட்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.
இந்த நிலையில் வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து,  தமிழகத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், புலம் பெயர் தொழிலாளி மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். புலம்பெயர் தொழிலாளி என்பதற்காக மருத்துவ வசதிகளை மறுக்கமுடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.