சென்னை:  நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் கொடி யேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து சுதந்திரன சிறப்புரை ஆற்றினார். அப்போது  சுதந்திர போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று கூறினார்.

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசியவர், 4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன், மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன், அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் என்றார்.

சுந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும்  என்றும், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம்  ரூ .8,000ல் இருந்து  ரூ .8,500  ஆக  உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடித்து விரைவில் திறக்கப்படும்,

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.6550 கோடி செலவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன்போராடி வெல்லும் .

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இந்தாண்டு தொடங்கப்படும்.

கேரள அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையால் பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களில் நிலவிய பிரச்சினைக்கு தீர்விற்கு வந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.