இந்த வருடம் உத்திரம் நாள் : 30.3.2018 | பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை.!

பங்குனி உத்திரம் என்பது அறுபடை வீடு முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும்.

தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறுவது வழக்கம்.

அதுபோல பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடுகளும் நடைபெறும். அன்றைய தினம் குலதெய்வ வழிபாடு செய்வது  மிக முக்கியமானதாகும்.

ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் பல கடவுள்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு தான் முக்கியம்.  குல தெய்வத்தை வழிபடாமல், வேறு எந்த தெய்வத்தை நாடிச்சென்று வணங்கினாலும், குலதெய்வம் அணுக்கிரகம் இல்லையென்றால் புண்ணியம் இல்லை.

குல தெய்வ வழிபாடுதான் ஒருவருக்  100 சதவீத பலன்களை தர வல்லது. அந்த குல தெய்வம்தான் ஒவ்வொருவரையும்,  அவரது குலத்தையே பாதுகாக்கும். . ஒருவரது குல தெய்வத்தை வைத்து, அவரது பாரம்பரிய சிறப்பையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தற்போது பணி நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள், வருடத்துக்கு ஒரு முறையாவது தங்களது  குல தெய்வ கோவிலுக்கு சென்று வணக்கி வந்தால் மிகவும் சிறந்தது. அதுவும் பங்குனி உத்திரத்தினம் அன்று வணங்கினால்  புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குல தெய்வ வழிபாடு குறித்து, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் கிடைக்கவும், இயற்கை செழிக்கவும்  மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.

குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது. ஆனால் நமக்கு எந்த வகை வழிபாடு உகந்ததோ அதையே பின்பற்றலாம்.

ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு பவுர்ணமியாகும். எனவே இந்த நாளில் குல தெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக, மிக அவசியமாகும்.

மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.

பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் செழிப்பு அடைந்து மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

அண்ணன் – தம்பி குடும்பத்தினர் எல்லோரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். இது குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் தவழச் செய்யும்.

எனவே குல தெய்வ வழிபாடு என்பது முக்கியம். பங்குனி உத்திரம் அன்று அவரவர்களுடைய குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவது நல்லது.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே குல தெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள்.

நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரக தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள், அதுபோல வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

ஒருவருக்கு  குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எந்த தெய்வத்தை  வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை.

அதுபோல  குல தெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குல தெய்வத்தை காட்டும்படி வேண்டலாம்.

குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போக கூடாது என்று கிராமங்களில் பேசுவது வழக்கம். அதுபோல ஒவ்வொருவரும் குலதேய்வதை வணங்கி ஆசி பெற்று சிறப்பாக வாழுங்கள்.