சென்னை

நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.

நாளை முதல் தளர்த்தப்பட்ட விதிகளுடன் உதிய ஊரடங்கு  அமல்படுத்தப்பட உள்ளது

இதையொட்டி பல தொழிலகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவை இயங்க உள்ளன.

இதில் மாவட்டத்துக்குள் பயணம் செய்ய இ பாஸ் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ பாஸ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கனவே அந்தந்த மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டுள்ள இ பாஸ்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.