டில்லி

கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி  வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக் கடைப் பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆயினும் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளது.

இன்று இரவு 8 ம்னி முதல் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார்.

அவர் இன்று இரவு 12 மணி முதல் 3 வாரங்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான உபகரணங்களுக்காகவும் மருத்துவ வசதிகளை வலுவாக்கவும் மத்திய அரசு ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளர்.