காந்திநகர்: குஜராத்தில் உள்ள அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தொடங்குவுள்ள புதிய ‘சரிபார்க்கப்பட்ட பால் விற்பனையாளர்கள்‘ திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் வருவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதுபோன்ற அமைப்புசாரா பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவருக்கும் புதிய திட்டத்தின் கீழ் பதிவு குறித்த அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தி இந்து பிசினஸ்லைன் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் 40 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளனர்.  குஜராத்தில் பெறப்படும் அனுபவத்தின் அடிப்படையில் இதேபோன்ற திட்டத்தை நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்யப்படும்.

தற்போது, ​​கூட்டுறவு பால்பண்ணைகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட தனியார் பால்பண்ணைகள் மட்டுமே உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் படி ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் வருகின்றன. இருப்பினும், சிறிய விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இத்தகைய விதிமுறைகளின் எல்லைக்கு வெளியே தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

குஜராத்தின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் (எஃப்.டி.சி.ஏ) கமிஷனர் ஹேமந்த் ஜி கோஷியா இந்த திட்டத்தை வெளியிடுவதற்கான பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், அனைத்து விற்பனையாளர்களுக்கும் அடுத்த ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் .