சென்னை: மிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, 7வது கட்ட பொதுமுடக்கம் தளர்வுகளுடன் ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படுமா என்பது இன்று தெரிய வரும்.
ஏற்கனவே அறிவித்தபடி,  ஆகஸ்டு மாதத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகள் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனப்டி, ஆகஸ்டு 30ந்தேதி  ஞாயிற்றுக்கிழமை  இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த ஊரடங்கின்போது, பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவ மனை வாகனங்கள், அவசர ஊர்திகள் மட்டும் அனுமதிக்கப்படும். வேறு எந்த சேவைகளும் கிடையாது.