சென்னை:
மிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 7வது கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், ஆகஸ்டு மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் (2, 9, 16, 23, 30 தேதிகள்) தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று  அறிவித்தது.
அதன்படி 7வது கட்ட ஊரடங்கு இன்று தொடங்கிய நிலையில், நாளை (ஆகஸ்டு 2ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இன்று (1–ந்தேதி) நள்ளிரவு 12 மணி முதல் 3–ந்தேதி காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

இந்தஊரடங்கின்போது, பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவ மனை வாகனங்கள், அவசர ஊர்திகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து, கொரோனா பரவலை தடுக்க அரசின் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.