சென்னை:
மிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில்  மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு 3வது வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும்  தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் அவ்வப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த மாதத்தின்  அனைத்து ஞாயிற்றுக்கிழமை களிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், மருத்துவ அவசரத் தேவைகள் மட்டுமே இயங்கும்.  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.