சென்னை:

‘‘ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்தீளேன்’’ என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

இமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது,‘‘ பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய அரசியலை தேர்ந்தெடுத்தேன். மக்களுக்காக வாழ்வதில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணம் முடிந்தவுடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்’’ என்றார்.