சினிமா துறையில் நடிகர்கள் மட்டுமின்றி சில நடிகைகளும் அவ்வபோது மது போதையில் கலாட்ட செய்யும் சில சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ’ஆடுகளம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி, மது போதையில் கலாட்டா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழை விட டாப்ஸீ பாலிவுட்டிலேயே அதிக கவனத்தையும் செலுத்தி வருகிறார்.தற்போது அவர் விக்கி கெளஷலுக்கு ஜோடியாக நடித்து வரும் ‘மன்மர்ஸியான்’ (Manmarziyaan) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பார்ட்டி நடந்துள்ளது. அதில் தான் மது அருந்தி போதை அதிகமாகி கலாட்டா செய்துள்ளார்.

அந்த ஓட்டலின் கார்டன் பகுதியில் படுத்துக் கொண்டு , “இன்று இரவு இங்கு தான் தூங்க போகிறேன்” என்று பிடிவாதம் பிடித்துள்ளார். விக்கி கெளஷல் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரகளை செய்துள்ளார் .பிறகு ஓட்டல் ஊழியர்களின் உதவியோடு, டாப்ஸியை சமாளித்த விக்கி கெள்சல், அவரை அறைக்குள் அழைத்து சென்றாராம். இது அனைவரையுமே அப்செட்டாக்கியுள்ளது.