புதுடெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகித் அஃப்ரிடி, கொரோனா தொற்றிலிருந்து விரைந்து குணமடைய வேண்டுமென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் அவருக்கு ஆகாத கவுதம் கம்பீர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கம்பீரும் ஷாகித் அஃப்ரிடியும் ஓய்வுபெற்று விட்டாலும், இருவரும் அவ்வப்போது வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கம்பீர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தான் குணமடைவதற்கு அனைவரும் பிரார்த்திக்கும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் துவக்க வீரரும், தற்போதைய கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் காரணமாக யாரும் பாதிக்கப்படக்கூடாது. அரசியல்ரீதியாக ஷாகித் அஃப்ரிடியுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதேசமயம், அவர் வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்றுள்ளார்.

பாரதீய ஜனதாவில் இருந்தாலும், நாகரீகமான அரசியலை வெளிப்படுத்தியுள்ளார் கவுதம் கம்பீர் என்கின்றனர் விமர்சகர்கள்.