தேவையான  பொருட்கள்;

தயிர் – அரை கப்,

பெரிய பூண்டு – 1 பல்,

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

குளிர்ந்த தண்ணீர் – 2 கப்.

செய்முறை:

தயிர், பூண்டு, சீரகத்தூள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும். அதில் குளிர்ந்த தண்ணீரை சேர்த்து அடித்து வடிகட்டி கொத்தமல்லி தூவி பரிமாறவும். சீரகம் உடலை குளிச்சியாக்கும். பூண்டு இரத்த அழுத்தம் சீர்செய்யும். ஊளைசதை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.