டில்லி:

காஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், ‘காஸ்’ சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதையடுத்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். அப்போது, “காஸ் மானியம் ரத்து செய்யப்படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. யாருக்கு சிலிண்டர் மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.