பெங்களூரு:

‘‘மூத்த பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘‘பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிப்பதிலும், அவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்துவதிலும் அரசு நேர்மையுடன் செயல்படுகிறது’’ என்றார்.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி தனது வீட்டில் இருந்த லங்கேஷை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.