டெல்லியின் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிறுமி பலாத்காரம்..

டெல்லியில் உள்ள சத்தார்பூர் என்ற இடத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 10 ஆயிரத்து 200 படுக்கைகளுடன் பிரமாண்டமான சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது தான் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் ஆகும்.

இரு வாரங்களுக்கு முன்பு இந்த மையத்தில் 14 வயது சிறுமி கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதே நாளில் 19 வயது இளைஞனும் அந்த மையத்தில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர்.

10 ஆயிரத்து 200 படுக்கைகள் இருந்தாலும் 250 படுக்கைகள் மட்டுமே நிரம்பி இருந்தன.

அந்த பிரமாண்ட கட்டிடம் காலி மைதானம் போல் காட்சி அளிப்பதால், சிறுமியும், இளைஞனும் எந்த குறுக்கீடும் இன்றி சதா பேசிக்கொண்டிருந்தனர்.

கடந்த 15 ஆம் தேதி அந்த சிறுமியிடம், குளியலறை பக்கம் வருமாறு அந்த இளைஞன் கூறியுள்ளான்.

அவளும் சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுமியை,அவன் பலாத்காரம் செய்துள்ளான்.

இத்தோடு முடிந்திருந்தால், இந்த விஷயம் வெளியே கசியாமல் இருந்திருக்கும்.

ஆனால் அதே மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞனின் நண்பன், இந்த ’‘காட்சியை’’  தனது செல்போனில் படம் பிடித்துள்ளான்.

இதையடுத்து அந்த சிறுமி மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் சொல்ல, போலீசாரும் விரைந்து வந்து இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.

தலைநகரில் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்ட கொரோனா மையத்தில் கொரோனா, நோயாளி, மற்றொரு நோயாளியால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.பாரதி.