தராபாத்

தராபாத்தில் குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தேசிய ரக்பி விளையாட்டு அணியில் இடம் பெற்றுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அனுஷா என்னும் 16 வயது சிறுமிக்கு 26 வயது இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டது,  குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் காவல்துறையினர் அனுஷாவை திருமணஹ்துக்கு 10 நாட்களுக்கு முன்பு மீட்கபட்டார்.    அவரை காவல்துறை தற்போது கவனித்து வருகிறது.

விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்த அனுஷா  விளையாட்டுகளில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்.   கிரிக்கெட் போட்டிகளில் அவரது விளையாட்டு பலரையும் கவர்ந்தது.  தற்போது  அவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய அளவில் ரக்பி அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   ஐதராபாத் நகர  காவல் ஆணையர் அனுஷாவுக்கு  விளையாட்டுத் துறையில் முன்னேற தேவையான பண உதவிகளை அரசு செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.