thane girl

மும்பை: 8.6 சராசரியான ஒரு ஒட்டுமொத்த தர புள்ளி (CGPA) பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் பெற்றால் பல மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக, கடந்த மாதம் ஒரு சாலை விபத்தில் தங்கள் மகளை இழந்த ஒரு தானே குடும்பத்திற்கு இது சிறிய ஆறுதலாக உள்ளது.
ஏப்ரல் மாதம், பதினாறு வயதான கேஜல் பாண்டே தனது தாயாரோடு, இரு சக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அவர்களை முந்த முயற்சி செய்த ஒரு கார் கேஜலை வண்டியிலிருந்து தள்ளிவிட்டது. அந்த விபத்து சரி செய்ய முடியாத மூளை சேதத்தை உண்டாக்கி அவள் மூளை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த சோகத்திலிருந்து வெளிவருவதற்கு முன்பே கேஜலின் குடும்பத்தார் அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை தானம் செய்ய முடிவு செய்தனர். நன்கொடையாக கொடுக்கப்பட்ட உறுப்புகள், மும்ப்ராவைச் சேர்ந்த 14 வயது குழந்தை உட்பட மூன்று பேரின் உயிர்களை காப்பாற்ற உதவியது.
“அவள் இங்கு இனி இல்லை என்பதை பழகிக் கொள்ள மிகவும் கடினமாக உள்ளது. அவளது உறுப்புகளை நன்கொடை கொடுத்ததன் மூலம் அவள் இன்னும் உயிருடன் எங்களுடன் இருப்பதை போலவே நாங்கள் உணர்கிறோம். அவளது தேர்வு முடிவுகளை பார்க்க எங்களுக்கு ஆர்வம் இல்லை,” என்று கேஜலின் தந்தை ஷ்யாம்காந்த் பாண்டே கூறினார்.
கேஜலின் இளைய சகோதரர் இன்னும் அவரது சகோதரியின் மரணத்திலிருந்து மீண்டு வரவில்லை. “அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை. கேஜல் அவருடைய படிப்பிற்கு எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதை நினைத்துக் கொண்டே இருக்கிறார்,” என்று கேஜலின் உறவினர், பவன் குமார் கூறினார்.
 
தானே அருணோதயா பொது பள்ளியின் மாணவரான கேஜல் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு, நடனம் மற்றும் பிற கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கினதாக குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கூறினர். பள்ளி முதல்வர் மாதுரி சந்திரசேகர், கேஜலை தனது புத்திசாலியான மாணவர்களில் ஒருவராக நினைவுகூர்ந்தார்.
“அவள் ஒரு ஆல்-ரவுண்டர் மற்றும் மிகவும் புத்திசாலியான குழந்தை. அவள் பல ஆண்டுகளாக பள்ளியில் இருந்து வந்தாள், எப்போதும் மிகவும் நல்ல மரியாதையான குழந்தையாக இருந்தாள்.”
“அவள் தனது பிறந்தநாளைக்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் முன் இறந்தாள். அவள் எல்லோரையும் சிரிக்கவைத்து எப்போதும் உற்சாகத்துடன் இருப்பாள். அவள் எனது சிறந்த தோழி, அவள் என்னுடன் இல்லை என்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.” என்று கேஜலின் வகுப்புத் தோழி மற்றும் நெருங்கிய தோழியான மதுரா கூறினார்,
“அவள் காமர்ஸ் பாடம் எடுத்து ஒரு பட்டய கணக்காளர் (chartered account) ஆக திட்டமிட்டிருந்தாள். அவளுக்கு என்ன வேண்டும் என்பதில் அவள் எப்போதும் உறுதியாக இருந்தாள் மற்றும் அதை எப்போதும் அடையவும் செய்தாளள்”, என்று அவரது தந்தை கூறினார்.