பனாஜி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் தமது வீட்டிலோய தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் படி அவர் தனிமைப்படுத்த்திக் கொண்டு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவரங்களை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

எனக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆகையால் என்னை நானே வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு உரிய சிகிச்சை பெற்றுவருகிறேன். வீட்டிலிருந்து எனது கடமைகளை தொடர்ந்து செய்வேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.