பானஜி:

கடந்த தேர்தலில் வேலைவாய்ப்பு தருவோம் என்று அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என அமைச்சர் முன் கேள்வி எழுப்பியவரை போலீஸார் கைது செய்தனர்.


கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில், தர்ஷன் காவோகர் என்பவர் திடீரென கோஷம் எழுப்பினார்.

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, வேலை வாய்ப்பை ஏன் ஏற்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தர்ஷன் காவோகர், வாக்குறுதி அளித்தபடி கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பை ஏன் ஏற்படுத்தவில்லை என்று தான் கேட்டேன்.

அதற்கான என்னை கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர் என்றார்.

இது குறித்து அமைச்சர் ரானே கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டார். எனினும் இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.