சென்னை:

சென்னை கொத்தவால்சாவடி நாட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாவனா. துணை நடிகை. கமல் நடித்த தூங்காவனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் குடும்பத்தோடு ஐதராபாத் சென்றார். சம்பவத்தன்று திரும்பி வந்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிலுக்கு அடியில் நகைகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி என 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.