புதுச்சேரி:  ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம், மர்ம நபர் தாலி செயினை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அவலம் புதுச்சேரியில் உள்ள பிரபலமான ஜிப்மர் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றான ஜிப்மர் மருத்துவமனையில் சமீப காலமாக பல்வேறு அவலங்களும் நடந்தேறி வருகிறது. இந்த நிலையில்,  மருத்துவமனையின் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் இருந்து தங்கச்செயின் பறிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை யும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே உள்ள மரக்காணம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டனின் மனைவி ஜெயா என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமாக இருந்தால்,  ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சம்மவதன்று இரவு ஐசியு பிரிவுக்குள் புகுந்த மர்ம நபர்,  ஜெயாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கத்தாலியை, பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். அந்த சமயத்தியில் ஐசியு பிரிவுக்குள் செவிலியர், அண்டென்டர் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் செக்யூரிட்டியும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து, ஜெயா, தனது கணவர் மணிகண்டன் மூலம் புகார் அளித்தார். மேலும், அங்குள்ள காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம்,  விசாரணைக்கு உத்தரவிட்டு நிலையில்,  வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்ற செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பிரபலமான மருத்துவமனையின், அவசர சிகிச்சை பிரிவான ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் செயினை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகத்தின் அவலம் அம்பலமாகி உள்ளது.