கோல்டுகோஸ்ட் :

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் பாலாசேகப் தங்கப் பதக்கம் வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் பாலாசாகேப் தங்கத்தை தட்டிச்சென்றார்.

அதுபோல பெண்களுக்கான 76 கிலோ பிரி ஸ்டைல் மல்யுத்த போட்டியிலும் இந்திய வீராங்கனை கிரண் வெண்கலம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே இந்தியா பல பதக்கங்களை குவித்து வரும் நிலையில் இன்று 4 பதக்கங்களை தட்டிச்சென்றுள்ளது.

பெண்களுக்கான பிரி ஸ்டைல் மல்யுத்தம்  53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பபிதாகுமாரி வெண்கலப் பதக்கமும், துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கனை தேஜஸ்வினி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள நிலையில், தற்போது, மல்யுத்த போட்டியில் தங்கம் மற்றும்  வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.