சென்னை:

கூடிய விரைவில் இணைப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று நல்லசெய்தி வரும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘மோசமாக அபத்தமாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது.

எந்த ஒரு குடும்பத்தின் பிடியிலும் கட்சி சிக்கி கொள்ள கூடாது என்பதே எங்களின் குறிக்கோள். கூடிய விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து நல்ல செய்தி வரும்’’ என்றார்.