உ.பி. மாநிலம் கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பரிபாதமாக உயிரிழந்துள்ளனர். இச்செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாகுறை என்பதை நம்ப முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் சோதனையில் குழந்தைகள் இறந்ததா? என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவு

என்னால இன்னைக்கு வேற எந்த பதிவ பற்றியும் சிந்திக்க முடியல. ஒன்னு ரெண்டு இல்ல மொத்தம் 63 குழந்தைங்க செத்து போய் இருக்காங்க. முதலில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கம்பெனிக்கு 64 லட்சம் பணம் பட்டுவாடா செய்யவில்லை. அதனால் அந்த ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் சப்ளையை நிறுத்தி விட்டது என்கிறார்கள்.

ஆனால் இப்பொழுது மூளை பாதிப்பால் 63 குழந்தைகள் இறந்துவிட்டதாக செய்திகள் கசிகிறது. நிற்க.

நான் 8 ஆண்டுகள். Industrial and Medical gases தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்தவன், செய்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன்.

1. முதலில் ஆக்சிஜன் சப்ளை என்பது இரண்டு முறைகளில் செய்வோம். 6m3 or 10m3 அளவுள்ள சிலிண்டர்களில். மற்றது பெரிய 1000 gallons அளவுகளுக்கு மேலுள்ள stationary tanker களில்.

2. இதனை பெரிய மருத்துவமனைக்கு நிச்சயமாக டேன்கர்களில் தான் சப்ளை செய்வோம். அந்த கேஸ் liquified நிலையில் இருக்கும். அதை வாயுவாக்க தேவையான evaporator பொருத்தி இருப்பதால் அதை பாதுகாக்க கேஸின் அளவை monitor கருவியும் அதில் பொருத்தப்பட்டே இருக்கும். ஆக oxygen இருப்பை அது automatic ஆகவே தெரியப்படுத்தும்.

3. என்ன தான் payment delayஆனாலும் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களுக்கு சப்ளை நிறுத்தப்படாது. இது ஒவ்வொரு medical and industrial gas நிறுவனங்களின் policy ஆகும்.

4. ஆக்சிஜன் தான் industrial & medical gas வகைகளிலேயே மிகவும் விலை குறைவான ஒன்றாகும். இதற்கு காற்றுதான் மூலப் பொருள். 6m3 அளவுள்ள oxygen cylinder அரபு அரபு நாடுகளிலேயே இந்திய மதிப்புக்கு 180 ரூபாய் தான். எனில் இந்தியாவில் இதன் மதிப்பும் இதே அளவோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்கும். அதனால் 64 லட்சங்கள் oxygen supply க்கு பாக்கி என்பது நம்பும் படியாக இல்லை.

5.காலையில் 30 குழந்தைகள் ஆக்சிஜன் சப்ளையால் இறந்து விட்டனர் என்று கூறி விட்டு, மாலை முதல் 63 குழந்தைகள் மூலை பாதிப்பால் இறந்துவிட்டனர் என்று சொல்வது something fishy.

6. அதைவிட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 கோடி compensation to family of baby victims என்பது நரநரவென உறுத்துகிறது.

7. 64 லட்சம் இல்லாத அரசிடம் ரூ. 63*2 கோடி மொத்தம் ரூ. 126 கோடிகள் எப்படி உடனடியாக?

8. அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான மூளை பாதிப்பு, அதுவும் அனைவருமே குழந்தைகள், எப்படி இது சாத்தியம்..? It may never happened anywhere in the world!

9. ஏதேனும் பன்னாட்டு மருந்து கம்பெனியின் சோதனை முயற்சியா? அதற்காக அந்த பிஞ்சுகள் பலியாக்கப்பட்டு ஆளுக்கு 2 கோடிகள் தூக்கி பிச்சையாக வீசப்படுகிறதா?

10. இந்த சம்பவத்தையும், இதற்கு காரணமான அம்மாநில அரசையும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கமிசன் அமைத்து விசாரிக்குமா..?

இன்று உ.பி..! நாளை..?!

சமூகம் சிந்திக்க வேண்டிய அவசர காலமிது!