சென்னை:

மிழகத்தில் 16அரசு கலை -அறிவியல் கல்லூரி முதல்வர்களை  பணியிட மாற்றி  தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பதவி உயர்வுடன் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  2-ம் நிலை முதல்வர்களாக பணியாற்றி வந்தவர்கள்,  முதல் நிலை பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் படி உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த கே.மீனாவுக்கு திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 15 பேர் முதல் நிலை அரசுக்கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வேறு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர்.

16 பேரும், உடனே புதிய இடத்தில் பணியில் சேர உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிக்கைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.