‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட அறிக்கை  பட்டியலில்  தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை  என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த, 12 நகரங்கள் உட்பட, நாடு முழுவதும், 98 நகரங்களை மத்திய அரசு,’ ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு தேர்வு செய்தது. விரைவாக திட்ட அறிக்கை சமர்ப்பிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முதல், 20 நகரங்களின் பட்டியல் கடந்த ஜன., 28ல் வெளியிடப்பட்டது.
சென்னை, கோவை ஆகிய தமிழக நகரங்கள்  இதில் பின்தங்கிய நிலையிலேயே இருந்தன. அடுத்த, 13 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு, நேற்று வெளியிட்டது. இதில், ஒரு தமிழக நகரம்கூட இடம்  பெறவில்லை.
முதல் பட்டியலில் பின் தங்கியதற்கு, மழை வெள்ளம் பாதிப்பை காரணமாக கூறிய தமிழக அரசு,  தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததை காரண மாக கூறியது.  2015 ஜூன் மாதம், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மத்திய அரசே, இதற்கான கலந்தாலோசனை நிறுவனங்களை பரிந்துரைத்தும், தமிழக நகரங்களின் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மிக தாமதமாக  நடக்கிறது.
download
நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு முழு காரணமாககூறப்படுகிறது. முதல்கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியலில், பா.ஜ., தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லக்னோ, ( உத்தர பிரதேசம் )  பாகல்பூர், ( பீஹார்,)   நியூடவுன், கோல்கட்டா, (மேற்கு வங்கம் )  பரிதாபாத், ( ஹரியானா) . சண்டிகர்,    ராய்ப்பூர், ( சத்தீஸ்கர்)   ராஞ்சி, (ஜார்க்கண்ட் )  தர்மசாலா, (இமாச்சல பிரதேசம்),   வாரங்கல் ( தெலுங்கானா), . பனாஜி ( கோவா),  அகர்தலா  (திரிபுரா), . இம்ப்பால் ( மணிப்பூர்)  போர்ட்பிளேர்,  (அந்தமான் – நிகோபர் தீவுகள்) ஆகிய நகரங்கள் 2வது பட்டியலில் தேர்வாகியிருக்கின்றன.