கள்ளிடைக்குறிச்சி:

ரசு மருத்துவமனையின்  அலட்சியம் காரணமாக, பச்சிளம் குழந்தையின் கண்ணில் எறும்புகள் கடித்து புண்ணானது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. இதன் காரணமாக குழந்தையின்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் அருகே உள்ள  வாசுதேவன் தம்பதியினருக்கு கடந்த  18-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு முச்சுதிணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குழந்தையை இன்குபேட்டர் கருவியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த குழந்தையின் கண்ணில் எறும்புகள் கடித்து காயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட வாசுதேவன் தம்பதியினர், அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்களி டம் தெரிவித்தும், அவர்கள் சரியான முறையில் பதில் தெரிவிக்காத நிலையில், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கும், வாசுதேவனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மருத்துவமனையின் கண்ணாடியை வாசுதேவன் உடைத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டு  மருத்துவர் அங்கிருந்துச் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்த வாசுதேவன் மற்றும் அவரது உறவினர்கள்  மருத்துவமனையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை சரியாக கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து, குழந்தையை வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். வழியால் கதறி அழுத குழந்தை ஒருகட்டத்தில் மயங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள அரசு மருத்துவமனை ஊழியர்கள், குறை பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டதாக கூறியுள்ளனர்.