சென்னை,

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு திமிழக அரசு ஆதரவு கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

திமுக. தலைமையில் நடைபெறும் விவசாயிகளுக்கான பந்த்துக்க அதிமுகவும், தமிழக அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று   எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், ஆதரவி அளிக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

ஆளும் அரசு எப்போதும் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்படுவதில்லை. மத்திய அரசின் விதிமுறைக்கு உட்பட்டுதான் தமிழக அரசு நடப்பது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த போராட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம். எப்போதுமே போராட்டங்களில் அரசு பங்கேற்காது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.