சென்னை:

த்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் குழப்பம் நிறைந்துள்ளது என்றும், அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்துகொண்ட ஒரு பட்ஜெட் என்று2ம்  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து டிவிட் போட்டுள்ளார்.

‘அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்து கொண்ட ஒரு பட்ஜெட் என டுவிட்டரில் கமல் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பட்ஜெட்டை படிக்கும் போது கவர்ச்சிகரமாக தோன்றினாலும் மானியங்கள் மிகவும் குறைவானதே என அவர் கூறியுள்ளார்.

மோடி அரசின் கடைசி பட்ஜெட்டான  இடைக்கால பட்ஜெட் கடந்த 1ந்தேதி தற்காலிக நிதி அமைச்சர் பியூஸ் கோயலால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவுப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் குறித்து 4 நாட்களுக்கு பிறகு கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,  மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த இடைக்கால பட்ஜெட்டை முதல்முறை படிக்கும்போது மத்திய தர மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கவர்ச்சிகரமாக இருப்பதுபோல தோன்றினாலும், அவர்களுக்கு கிடைப்பதாக கூறப்பட்டிருக்கும் மானியங்கள் மிகவும் குறைவானதே.

தேர்தலின் போது மக்கள் தங்களுக்கு வாக்களிக்க சட்டப்பூர்வமாக பணம் கொடுப்பது போன்று தான் சாதாரண வாக்காளன் இந்த நிதி அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கிறான்.

வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு இவர்கள் அளித்திருக்கும் சலுகை ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால் மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காமல் பிற கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள் என்றால் அடுத்து வரும் புதிய அரசு இவர்கள் தாக்கல் செய்திருக்கும் குழப்பம் வாய்ந்த இந்த பட்ஜெட்டினை ஏன் தொடர்வார்கள்?

மத்திய அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்துகொண்ட ஒரு பட்ஜெட்.

மிக முக்கியமாக இந்த மத்திய நிதியறிக்கை தமிழ்நாட்டின் எந்த முக்கிய பிரச்சனைகளை குறித்தும் எவ்வித அக்கறையினையும் காட்டவிரும்பவில்லை என்பது தான் உண்மை.

இவ்வாறு கமல் டிவிட்டியுள்ளார்.