டெல்லி: அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில், 2 ஏர் பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:  கார்களில், ஓட்டுநர் இருக்கை மட்டுமின்றி, முன்பக்கமுள்ள மற்றொரு இருக்கையிலும் ஏர் பேக் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தரச்சான்று தரத்தில் ஏர் பேக் அமைப்பது கட்டாயம்  ஆகும்.

அனைத்து வகை கார்களிலும் ஓட்டுநருக்கு அருகில் இருக்கும் இருக்கைக்கும் ஏர் பேக் அமைப்பது கட்டாயம். ஏற்கனவே உள்ள பழைய மாடல்களில் புதிய கார்கள் உருவாக்கப்பட்டால், ஜூன் முதல் இரு பக்க இருக்கையிலும் ஏர்பேக் அமைக்க வேண்டும். அதற்கான வடிவமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.