சென்னை: அரசு பணியிடங்களில் இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க  தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக அரசு அலுவலகங்கள் முழுமையாக செயல்படாத முடியாத நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, கடந்த 1ந்தேதி முதல் அரசு அலுவலகங்கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசு பணியிடங்களில் இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனைத்து துறை துணைச் செயலாளர்களுக்கு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இடமாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் மாறுதல் வழங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.