கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும், நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். ஆசிரியர் தினத்தில் கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவில் உள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர்களுக்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.