சென்னை:

ரபரப்பான  சூழ்நிலையில் தமிழக சட்டசபை   இன்று கூடியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

இன்று காலை காலை 9.55 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்த கவர்னர் பன்வாரிலைசபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ச

பாநாயகர் இருக்கைக்கு வந்த அவர், சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களை பார்த்து வணக்கம் செலுத்தினார். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

அதன்பிறகு  கவர்னர் பன்வாரிலால் புரோகித் வணக்கம். ‘அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என தமிழில் கூறி தனது உரையை வாசிக்க தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கூச்சல்போட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பேசுவதை நிறுத்திய கவர்னர் அனைவரும் அமைதியாக இருங்கள் என்று சில முறை எதிர்க்கட்சியினரை பார்த்து கூறினார். ஆனால், அவர்கள் தொடர்ந்து கூச்சல்போட்டுக்கொண்டு அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சலிட்டபடியே  திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

கவர்னர் தனது உரையை தொடர்ந்து வாசிக்க தொடங்கினார்.