சென்னை:

மிழக அரசியல் நிலவரம் குறித்து  செய்தியாளர்கள் கேட்டதற்கு  ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து பிற்பகல் 3.40 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார்.விமானத்தில் அவரை , செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர். அப்போது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதிலளிக்க ஆளுநர் மறுத்து விட்டார்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராஜ்பவன் சென்றடைந்தார். முன்னதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 5 மணிக்கும், சசிகலா தரப்பிற்கு 7.30 மணிக்கும் ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.