பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் யாஷ்வர்தன் அஹூஜா புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் தனது ஓட்டுநருடன் தனது ஓட்டுநருடன் ஜூஹூ பகுதியில் காரில் பயணித்திருக்கிறார்.

திடீரென முன்னால் ஒரு கார் வந்து இவரது காரை மோதிவிட்டது. யாஷ்வர்தனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.காரில் சில கீறல்கள் விழுந்துள்ளன. ஆனால் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்துள்ள கோவிந்தா கார் மோதல் குறித்துப் பேசியுள்ளார். அந்த இன்னொரு கார் யாஷ் ராஜுடையது என்றும், இந்த விஷயம் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பட்டது என்றும், இரு தரப்பிலிருந்தும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்படவில்லை என்றும் கோவிந்தா கூறியுள்ளார்.