கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்

செல்வமணியின் வேண்டுகோளுக்கிணங்க ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ முன்னணி நடிகர்கள் முன்வந்து சுமார் 15 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது அரசு அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அந்த தொகை நேரடியாக நடிகர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை இன்று மற்றும் நாளைக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.