புதுச்சேரி:
3 நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டதற்கு தமிழிசைக்கு, அரசு கொறடா அனந்தராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறாத நியமன எம்எல்ஏக்களை காட்சி ரீதியாக எடுத்துக் கொள்ள முடியாது. பொறுப்பு ஆளுநர் தமிழிசை மூன்று நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டதற்கு அரசு கொறடா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 3 நியமன எம்எல்ஏக்களின் காட்சி ரீதியாக எடுத்துக் கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது என அரசுக்கு அனந்தராமன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த மூன்று நியமன எம்எல்ஏகளை கட்சி சார்பில் குறிப்பிட்டாமல் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு. தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளதாக புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்.

3 நியமன எம்எல்ஏக்களின் பாஜக என்று கூட எந்தவித முகாந்திரமும் இல்லை. மூன்று பேரும் சட்டரீதியாக கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லை. மூன்று நியமன எம்எல்ஏ க்களும் கட்சி ரீதியாக எடுத்துக்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது என்று அவர் கூறியுள்ளார்.