துரை

திமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளர்.

அதிமுக உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.   மாநிலமெங்கும் நடைபெறும் இந்த சேர்க்கை நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று மதுரையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துக் கொண்டார்.

அப்போது செல்லூர் ராஜு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.  அவர், “அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும்.   முதல்வர் பழனிச்சாமி காவிரி பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் கோரிக்கை அளிக்க உள்ளார்.     அதிமுக காவிரி விவகாரத்தில் இறுதி வரை போராட தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.