கவுதமன்

ரஜினிக்கு போருக்கு தயாராகுங்கள் என்று ரசிகர்களை உசுப்பிவிடும் நடிகர்  ரஜினிகாந்த் தமிழர்களின் வாழ்வு ஆதாரத்துக்கு எதிராக தொடுக்கபட்ட போர்களின் போது மெளனம் காத்து ஏன்” என்று இயக்குனர் கெளதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், “ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவித்த போதும் சரி, ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போரட்டத்தின் போது நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்தார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் தமிழர்கள் அல்லாதோர் ஆட்சி புரிய ஆசைபட்டால் அவர்களுக்கு எதிராக போர் தொடுப்போம்” என்று கெளதமன் தெரிவித்துள்ளார்.