சென்னை:

ள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி பொருத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

பள்ளி   மாணவ மாணவிகள் நலன் கருதி பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்ற விடுமுறை கால நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிமன்றம், தமிழக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.