கிரின்லாந்தில் உருகி வரும் பனிமலைகள் காரணமாக அந்நாட்டில் பேரழிவு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.

“கிரீன்லாந்தின் மிகப்பெரிய தடிமனாக  3வது பனிப்பாறை உருகி வருவதால், கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதாகவும், இந்த பனிப்பாறைதான்  குற்றவாளி, இதுவே எங்கள் ஆய்வுக்கு துணைபுரிகிறது” என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கடல் விஞ்ஞானியும், பெருங்கடல்கள் உருகும் கிரீன்லாந்து (ஓஎம்ஜி) பணியின் முதன்மை ஆய்வாளருமான ஜோஷ் வில்லிஸ் கூறி உள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் பருவ நிலை மாற்றத்தால், வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் கொளுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வனப்பகுதிகளும் தீக்கிரையாகி வருகின்றன.  இந்நிலையில் கொளுத்தும் வெயிலில், நீர்நிலைகளில் படர்ந்திருந்த பனிக்கட்டிகளும் உருகத்தொடங்கியுள்ளன.

கிரீன்லாந்தில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், பனிக்கட்டி படலம் உருகி 197 பில்லியன் டன் நீர் அட்லாண்டிக் கடலில் சேர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதுவும் கடந்த 31ம் தேதி மட்டும், பனிக்கட்டிகள் உருகி 12 பில்லியன் டன் நீர் நீர்நிலைகளில் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடல் மட்டம் பூஜ்யம் புள்ளி ஒரு மில்லி மீட்டருக்கு உயர்ந்திருக்கலாம் என்றும், இந்த ஆண்டில் கடல் மட்டம் உயர கிரீன்லாந்து முக்கிய காரணியாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் 50க்கும்  மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானி கள் கண்டுபிடித்துள்ளனர். தொக்க ஆய்வில்  நான்கு ஏரிகள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நடத்திய இந்த ஆய்வில் வட துருவப்பகுதியிலும் சுமார் 470 ஏரிகள்  இருப்பது தெரிய வந்துள்ளது.

நிலப்பரப்பிற்கு மேலிருந்து வரும் அழுத்தமும், அடியில் இருந்து வரும் ஜியோதெர்மல் வெப்பமும் அந்த ஏரிகளை திரவ நிலையில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வரைபடங்கள் மார்ச் 2016 மற்றும் 2017 க்கு இடையில் பனிப்பாறையின் உயரம் எவ்வாறு மாறியது என்பதைக் காட்டுகிறது (மேல்); மார்ச் 2017 மற்றும் 2018 (நடுத்தர); மற்றும் மார்ச் 2018 மற்றும் 2019 (கீழே). OMG இன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஆராய்ச்சி விமானங்களில் பறக்கவிடப்பட்ட ரேடார் ஆல்டிமீட்டரிலிருந்து உயர தரவு வந்துள்ளது. பனிப்பாறையின் உயரம் அதிகரித்த இடங்களை நீல பகுதிகள் குறிக்கின்றன, சில பகுதிகளில் ஆண்டுக்கு 30 மீட்டர் வரை குறைந்துள்ளது.

வட அட்லாண்டிக் அலைவு எனப்படும் காலநிலை வடிவத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பனிப்பாறை எதிர்வினையாற்றுகிறது என்று வில்லிஸ் மற்றும் சகாக்கள் கருதுகின்றனர், இது கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரையில் குளிர்ந்த நீரை வடக்கு நோக்கி கொண்டு வந்துள்ளது. OMG குழு சேகரித்த வெப்பநிலையின் அளவீடுகள் குளிர்ந்த நீர் நீடித்திருப்பதைக் காட்டுகிறது.

“குளிர்ந்த நீர் வந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், பனிப்பாறை இன்னும் வினைபுரிகிறது” என்று வில்லிஸ் கூறி உள்ளார். பனி உருகும் படலம் அதிகரித்து வருவதால் கிரின்லாந்து பேரழிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.