சென்னை:
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
தமிழக அரசுப்பணிகளுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு நடத்தி தேர்வு செய்து வருகிறது.
அதன்படி, துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு கடந்த ஜூலை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை தமிழம் முழுவதும் நடைபெற்றது.
இதில், குருப்- 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டது. தேர்வுபெற்றவர்கள், நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளனர்.
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற அரசு இணையதளத்தில் பார்க்கலாம் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நேர்காணல் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.