சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த குரூப் 1 முதனிலைத் தோவு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
குரூப் 1 தொகுதியில் அடங்கியுள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தோவு வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் காரணமாக, குரூப் 1 தொகுதிக்கான முதனிலைத் தோவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோவுகள் நடைபெறும் மாற்றுத் தேதியானது விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.