சென்னை,

மிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள குரூப் -4 தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 20ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது.

இதன் மூலம் தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில்,, குரூப்-4 , வி.ஏ.ஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்து தேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்து, அதற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13 எனவும், தேர்வு பிப்ரவரி 11ந்தேதி நடைபெறுவதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணத்தை டிசம்பர் 21-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின்  நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக  கூறி உள்ளது.