சென்னை:

சென்னை திநகரில் செயல்பட்டு வரும் பிரபல வணிக நிறுவனங்களான, சரவணா ஸ்டோர்ஸ், வசந்த் அன்கோ, ஹாட் சிப்ஸ் போன்ற கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள்  இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிஎஸ்டி வரி கட்டுவதில் மோசடி நடைபெற்றுள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து இந்த சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மட்டும் சுமார் ரூ. 40 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், வசந்த் அன்கோ மற்றும் ஹாட்சிப்ஸ் கடைகளும் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் கிடைத்த தகவலை தொலைந்து ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில்  6 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.