சூரத்,

கின்னஸ் சாதனை முயற்சிக்காக   குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரே நேரத்தில் 2500 ெண்கள் தங்கள் கைகளில் மருதாணி பூசிக் கொண்டனர்.

இன்று காலை  500 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெறுவதையொட்டி நேற்று  இந்த மருதாணி பூச்சு விழா நடைபெற்றதா கூறப்படுகிறது.

5 ஆயிரம் பெண்களில், தங்களது கைகளில் மருதானி போட விரும்பிய 2500 பெண்களுக்கு ஒருவர் மற்றவர் கைகளில் மருதாணி பூசும் வகையில்  11 நிமிடங்களுக்கு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த சாதனை,   கின்னஸ் ரெக்கார்டு சாதனைக்காக வந்துள்ளதாக, கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரி  அஸ்வின் சுதானி கூறி உள்ளார்.

இந்த சாதனையை பதிவு செய்த கின்னஸ் சாதனை அமைப்பினர் இன்னும் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த சாதனைக்கான திருமண நிகழ்ச்சியை சமஸ்த் ஆஹிர் சமாஜ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 24 ஆண்டுகளாக இந்த அமைப்பு தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற உள்ள இந்த திருமண நிகழ்ச்சியில், பாரதியஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானி, துணை முதல்வர் நிதின் பட்டேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

 

O