அகமதாபாத்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள்,பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் குஜராத்திலி அமைச்சர் ஈஸ்வர்சிங் படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: எனக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. ஆகையால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களே தங்களை பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன், ஈஸ்வர்சிங் படேல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.