இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் அரசுக்கு சொந்தமான வேளாண்மை பல்கலைக்கழகத்தில்  பயங்கரவாதிகள் துப்பாக்கியால்  சுட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் வடக்கு பகுதியான பெஷாவர்நகரில் வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளது. இன்று முகம்மது நபியின் பிறந்தநாள் என்பதால்  பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஆட்டோவில் வந்த 4 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அவர்கள் புர்கா அணிந்தபடி இருந்தனர் என்றும், அவர்கள்  கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், இதில் 4 பேர் மாணவர்கள் என்றும், மேலும் சுமார் 15 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தாக்குதல் நடத்திய 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் செய்திகள் வந்துள்ளன.