தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குருஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆலங்குடியில் உள்ள குரு பரிகார ஸ்தலமான ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்திலும் இன்று குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.

நவகிரகங்களின் குருவாக கருதப்படும் குருபகவான், ஒவ்வொரு ராசியில் இருந்தும் ஓராண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார், அந்தவகையில் இந்த ஆண்டு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.